செய்திகள்

சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி மது விற்றவர் கைது

Published On 2016-12-19 13:00 GMT   |   Update On 2016-12-19 13:00 GMT
சாத்தான்குளம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மது விற்றவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 32 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1000 பறிமுதல் செய்யப்பட்டது.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள தச்சமொழி பகுதியில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்பனை செய்த கந்தசாமிபுரத்தை சேர்ந்த கணேசன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 32 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1000 பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News