செய்திகள்

தேனி அருகே மனைவி கோபித்து சென்றதால் கணவன் தற்கொலை

Published On 2016-12-07 08:11 GMT   |   Update On 2016-12-07 08:11 GMT
தேனி அருகே மனைவி கோபித்து சென்றதால் கணவன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே தாடிக்சேரி செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது40) கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகஜோதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று நாகஜோதி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ரமேஷ் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி அருகே ரோசனம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (45). இவரது மனைவி வசந்தி (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமிக்கு குடி பழக்கம் இருந்தது.

இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று வசந்தி கோபித்துக்கொண்டு வருசநாட்டில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்ற கருப்பசாமி வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அவர் மறுக்கவே மனமுடைந்த கருப்பசாமி வருசநாடு சுடுகாடு அருகே வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பசாமி இறந்தார். இது குறித்து வருசநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

Similar News