செய்திகள்
கரும்பாலையில் பிளஸ்-1 மாணவி மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் புவனேசுவரி (வயது16), பிளஸ்-1 மாணவி.
இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபருடன் பேசி கொண்டிருந்தார். இதனை கண்ட தந்தை கண்டித்தாராம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற புவனேசுவரி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் அண்ணாநகர் போலீசில் வேல்முருகன் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி புவனேசுவரியை தேடி வருகின்றனர்.