செய்திகள்

ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்: வாக்காளர்களிடம் உறுதிமொழி பெறும் தேர்தல் அலுவலர்கள்

Published On 2016-11-10 08:16 GMT   |   Update On 2016-11-10 08:17 GMT
இடைத்தேர்தலில் வாக்களிக்க உள்ள மக்களிடம் பணம் வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழியை பெற்றுக்கொண்டு பூத் சிலிப் வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் ஓட்டுப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.

பூத் சிலிப் பெற்றுக் கொண்ட வாக்காளர்களிடம் ஓட்டுப்போடுவதற்கு பணம் பெற மாட்டோம் என்று உறுதிமொழி பெற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் இதற்கான படிவத்திலும் வாக்காளர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொகுதி முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Similar News