செய்திகள்

அவனியாபுரத்தில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மாயம்

Published On 2016-11-04 08:58 GMT   |   Update On 2016-11-04 08:58 GMT
வங்கிக்கு சென்ற இளம் பெண் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் புஷ்பவள்ளி. இவரது மகள் இந்திராணி (வயது22). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு சாம்பிராணி கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டிலிருந்த இந்திராணி வங்கிக்கு சென்று பணம் கட்டி வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெயமுருகன் (40). தீவிர சிவபக்தரான இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News