செய்திகள்
சுண்ணாம்புக்கல் இறக்குமதியில் சென்னை துறைமுகம் வரலாற்று சாதனை
சுண்ணாம்புக்கல் இறக்குமதியில் சென்னை துறைமுகம் வரலாற்று சாதனை படைத்து உள்ளது.
சென்னை:
சென்னை துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை துறைமுகத்தில் கடந்த 17-ந்தேதி எம்.வி.புல்மர் என்ற கப்பல் மூலம் தாய்லாந்தில் இருந்து 30 ஆயிரத்து 564 டன் சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்து வரலாற்று சாதனை படைத்து உள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த மார்ச் 25-ந்தேதி எம்.வி.ஸ்பிரிங் என்ற கப்பல் மூலம் 25 ஆயிரத்து 63 டன் இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த சாதனையை படைத்த சென்னை துறைமுகத்தில் உள்ள மொபைல் கிரேன் இயக்குபவர்கள், துறைமுக அலுவலர்கள், சுமைத்தூக்குபவர்களை துறைமுக தலைவர் பி.ரவீந்திரன் வாழ்த்து கூறினார். தொடர்ந்து பல்வேறு சாதனை படைக்கவும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னை துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை துறைமுகத்தில் கடந்த 17-ந்தேதி எம்.வி.புல்மர் என்ற கப்பல் மூலம் தாய்லாந்தில் இருந்து 30 ஆயிரத்து 564 டன் சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்து வரலாற்று சாதனை படைத்து உள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த மார்ச் 25-ந்தேதி எம்.வி.ஸ்பிரிங் என்ற கப்பல் மூலம் 25 ஆயிரத்து 63 டன் இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த சாதனையை படைத்த சென்னை துறைமுகத்தில் உள்ள மொபைல் கிரேன் இயக்குபவர்கள், துறைமுக அலுவலர்கள், சுமைத்தூக்குபவர்களை துறைமுக தலைவர் பி.ரவீந்திரன் வாழ்த்து கூறினார். தொடர்ந்து பல்வேறு சாதனை படைக்கவும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.