செய்திகள்

குத்தகை குளத்தில் திருட்டுத்தனமாக மீன்பிடித்த 3 பேர் கைது

Published On 2016-10-18 11:38 GMT   |   Update On 2016-10-18 11:38 GMT
தேனி அருகே குத்தகை குளத்தில் திருட்டுத்தனமாக மீன்பிடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி:

தேனி மாவட்டம் தேவாரம் வடக்குதெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் அங்குள்ள பெரியதேவி அம்மன்கண்மாய் குளத்தை குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வருகிறார். இதில் உள்ள மீன்களை அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன்(27), சின்னஈஸ்வரன்(53), சங்கிலிமுருகன்(34) ஆகியோர் திருட்டுத்தனமாக வலைவீசி பிடித்துள்ளனர்.

அப்போது அங்குவந்த பார்த்திபன் அவர்களை சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்த அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பார்த்திபன் தேவாரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தனர்.

Similar News