செய்திகள்
களக்காடு அருகே ஓடைப்பகுதியில் நின்ற மர்ம ஜீப்: போலீசார் கைப்பற்றி விசாரணை
களக்காடு அருகே ஓடைப்பகுதியில் நின்ற மர்ம ஜீப்பை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களக்காடு:
திருக்குறுங்குடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாப்பாத்து ஓடை அருகில் லோடு ஜீப் ஒன்று நின்றது. பதிவெண் அழிக்கப்பட்டிருந்த அதன் அருகில் யாரும் இல்லை.
இதனால் அந்த ஜீப் யாருக்கு சொந்தமானதுப ஓடைப் பகுதிக்கு எப்படி வந்தது? என்பது தெரியவில்லை. இதையடுத்து அந்த ஜீப்பை கைப்பற்றிய போலீசார், அதை திருக்குறுங்குடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அந்த ஜீப்பை யாரேனும் மர்ம நபர்கள் கடத்தி வந்து இங்கு நிறுத்தி சென்றனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்குறுங்குடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாப்பாத்து ஓடை அருகில் லோடு ஜீப் ஒன்று நின்றது. பதிவெண் அழிக்கப்பட்டிருந்த அதன் அருகில் யாரும் இல்லை.
இதனால் அந்த ஜீப் யாருக்கு சொந்தமானதுப ஓடைப் பகுதிக்கு எப்படி வந்தது? என்பது தெரியவில்லை. இதையடுத்து அந்த ஜீப்பை கைப்பற்றிய போலீசார், அதை திருக்குறுங்குடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அந்த ஜீப்பை யாரேனும் மர்ம நபர்கள் கடத்தி வந்து இங்கு நிறுத்தி சென்றனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.