செய்திகள்

திருவண்ணாமலை அருகே கடன் தர மறுத்ததால் தம்பதி மீது தாக்குதல்

Published On 2016-09-25 15:06 GMT   |   Update On 2016-09-25 15:06 GMT
கடன் தர மறுத்த தம்பதியை தாக்கிய வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த கிளியாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 52). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கலா. இவர்களிடம் வேலூர் மோட்டுபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (27) கடன் கேட்டார்.

கடன் கொடுக்க பாஸ்கரன் மறுத்ததால் ஆனந்தன் நச்சரிக்க தொடங்கினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆனந்தன் ஆத்திரத்தில் இருந்தார். திருவண்ணாமலைக்கு சென்றார்.

வீடு புகுந்து பாஸ்கரனை தாக்கினார். தடுக்க முயன்ற கலாவையும் ஆனந்தன் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தாக்குதலுக்கு ஆளான தம்பதி, மங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் வழக்குப்பதிந்து ஆனந்தனை கைது செய்தார்.

Similar News