செய்திகள்
தர்மபுரி அருகே கடன் தொல்லையால் மனம் உடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி, செப். 24-
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கடுக்கம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 47), விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.
நிறைய இடங்களில் கடன் வாங்கி இருந்தார். கடனை கட்டமுடியவில்லை. இதனால் மனம் உடைந்த இவர் கடந்த 6 நாட்களுக்கு முன்னர் பூச்சி மருந்தை குடித்து விட்டார். ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.