செய்திகள்

ராயபுரம் அருகே வி‌ஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை

Published On 2016-09-24 08:26 GMT   |   Update On 2016-09-24 08:26 GMT
ராயபுரம் அருகே வி‌ஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை செய்து கொண்டார்
ராயபுரம்:

புது வண்ணாரப்பேட்டை கீரை தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சிந்து இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

சிந்துவுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் அவருக்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்து வந்தார்.

நேற்று சிந்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது திடீர் என மயங்கி கீழே விழுந்தார்.

உடனே அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

விசாரணையில் மாப்பிள்ளை பிடிக்காததால் சிந்து வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News