செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை

Published On 2016-04-04 10:15 GMT   |   Update On 2016-04-04 10:15 GMT
ஜோலார்பேட்டை அருகே 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி சாமுடிவட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜி. அவரது மகள் சினேகா (15). அதே பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது நடந்து கொண்டிருக்கும் பொதுத் தேர்வில் 3 தேர்வுகளை சினேகா எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று சினேகா வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டுள்ளார். பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News