உள்ளூர் செய்திகள்

 கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன், வசந்தகுமார்.

கஞ்சா கடத்திய‌ 2 வாலிபர்கள் கைது

Published On 2022-06-08 11:16 GMT   |   Update On 2022-06-08 11:16 GMT
வாழப்பாடி அருகே கஞ்சா கடத்திய‌ 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கவர்கல்பட்டி பிரிவு சாலை அருகே, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 45 கிலோ போதைப் பொருளான கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து, 45 கிலோ கஞ்சா ரொக்கப் பணம் ரூ. 90,000 மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்தியதாக முத்தம்பட்டி சி.எஸ்.ஐ. நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24), வசந்த்குமார் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News