search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன தணிக்கை"

    • போலீசார் வாகன தணிக்கையின் போது சிக்கினார்
    • தப்பி ஓட முயன்றவரை மடக்கி பிடித்தனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வாலாஜா பகுதிகளிலும் நடைபெற்று வந்த திருட்டு குற்றங்களை கண்டுபிடிக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவிட்டார்.

    அதன்பேரில் ராணிப்பேட்டை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாய கமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந் நிலையில் ஆற்காடு ஆஞ்சநேயர் கோவில் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்து க்கிடமாக வந்த பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அவர் பைக்கை நிறுத்தாமல் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் விளாபாக்கம் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் குரு (வயது 33) என தெரிய வந்தது. தனியாக உள்ள பெண்கள் மற்றும் வயதான பெண்க ளிடம் அச்சுறுத்தி நகை களை பறித்ததாக கூறினார்.

    அவரிடம் இருந்து 4 பவுன் நகை, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

    • போலீசார் வாகன தணிக்கையில் சிக்கினார்
    • 3 பைக்குகள் பறிமுதல்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தார். இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் வி.சி.மோட்டூரை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 23) என்பதும், பைக் திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் புருஷோத்தமனை கைது செய்து அவரிடமிருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன தணிக்கை நடைபெற்றது.
    • இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை யில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன தணிக்கை நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்வாகன சோதனை யில் ஈடுபட்டனர். இதில் தகுதி சான்று இல்லாமல் இயக்கிய 2 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து திருச்செங் கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் கூறியதாவது:-

    கடந்த ஜூலை மாதத்தில் தொடர் வாகன தணிக்கை மேற்கொண்டதில் 630 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு 129 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.வரி செலுத்தாத மற்றும் இதர குற்றங்களுக்காக 30 வாகனங்களுக்கு வரியாக ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் விதிக்கப்பட்டது. மேலும் 99 வாகனங்களுக்கு ரூ.10 லட்சத்து 33 ஆயிரத்து 300 இணக்க கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதன்படி வரி மற்றும் இணக்க கட்டணமாக மொத்தம் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 400 அரசுக்கு வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியது, சீட் பெல்ட் அணியாதது, சிக்னல்களை மதிக்காமல் முந்தி சென்றது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது போன்ற குற்றங்களுக்காக 67 வாக னங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் வாக னங்கள் பறிமுதல் செய்யப்படும். அந்த வகையில் தற்போது 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்பாதி மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதை தடுக்கும் வகையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்றது.

    சீர்காழி தென்பாதி மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.

    மீண்டும் இவ்வாறு அவர்கள் வாகனங்கள் இயக்க அனுமதித்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • வாலிபர் ஜெயிலில் அடைப்பு
    • 30-க்கும் மேற்பட்ட கோழி தலைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே கோழி தலையில் வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியவரை போலீசார் ைகது செய்து ெஜயிலில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் கீழ்கொடுங்காலூர் சப்-இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் பைக்கில் வந்தவரை மடக்கி, பிடித்து விசாரித்தனர். அப்போது ரத்தம் சொட்ட, சொட்ட அவர் கொண்டு வந்த பையை பிரித்து பார்த்தனர்.

    அதில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் காட்டுப்பன்றி மற்றும் நாட்டு வெடிகுண்டு பொருத்திய 30-க்கும் மேற்பட்ட கோழி தலைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் போளூர், அல்லி நகர் பகுதியை சோந்த அஜித் (வயது 25) என்பதும், அவர் கோழி தலைகளுக்குள் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து அஜித்தை கைது செய்த போலீசார், வேட்டையாடப்பட்ட காட்டு பன்றியை ஆரணி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வேட்டை யாட பயன்படுத்திய பைக் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்ததோடு, அஜித்தை ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • விக்கிரவாண்டி அருகே சீல் வைக்கப்பட்ட ஆசிரமத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மினி லாரியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எடுத்து செல்லப்பட்டது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது. இங்கு தங்கியிருந்த மனநலம் குன்றியவர்களை துன்புறுத்தியது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது போன்ற புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் ஆசிரமத்தின் பின்பக்க கேட் வழியாக மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். அங்கு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர். ஆசிரமத்தின் அருகில் இருந்தவர்கள் இது குறித்து ஆசிரம நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து ஆசிரம நிர்வாகி அளித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கஞ்சனூர் இன்ஸ்பெ க்டர் சேகர், கெடார் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சூரப்பட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். மினி லாரியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எடுத்து செல்லப்பட்டது. இது அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து திருடப்பட்டது என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து மோட்டார் சைக்கிளையும், அதனை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளை திருடிய குண்டலப்புலியூரை அடுத்த பூங்குணம் தர்மலிங்கம் மகன் ராமன் (வயது 28), உலகலாம்பூண்டி ராமலிங்கம் மகன் முத்து (36) ஆகியோரை கைது செய்தனர். இது தவிர வேறு எங்கேனும் இவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு சில டிரை வர்கள் இரவு நேரத்தில் குடி போதையில் வாகனத்தை ஓட்டி வருகின்றார்கள்.
    • போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் தேசிய நெடுஞ்சா லையில் இரவு நேரங்களில் அதிக அளவில் கார் மற்றும் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. மேலும் ஒரு சில டிரை வர்கள் இரவு நேரத்தில் குடி போதையில் வாகனத்தை ஓட்டி வருகின்றார்கள். இதனால் வேப்பூர் பகுதியில் கோர விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வேப்பூர் கூட்ரோட்டில் வாகனங்க ளை ஆய்வு செய்தார். அப்போது அதிக பாரம் ஏற்றிச்சென்ற 16 லாரிகளை மடக்கிப்பிடித்து வழக்கு பதிவு செய்து அந்த வாகனங்களை வேப்பூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    மேலும் கார்களில் செல்பவர்களை நிறுத்தி மது போதையில் செல்கிறார் களா என்றும் காரின் ஆவ ணங்களை சரி பார்த்தும் வாகன ஓட்டிகளுக்கு மது போதையில் செல்லக் கூடாது என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இந்த ஆய்வின் போது திட்டக்குடி துணை சூப்பி ரண்டு காவ்யா, இன்ஸ் பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக வந்து இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடு படுவதை அறிந்த பொது மக்கள், அவருக்கு பாராட்டு களை தெரிவித்து வருகின்ற னர்.

    • வாகன தணிக்கையில் ஈடுபட்டு அபராதம் விதித்து வருகின்றனர்.
    • 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வானூர் ஆகிய இடங்களில் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், ஆய்வாளர்கள் சுந்தர் ராஜன், விஜய் முருகவேல் ஆகியோர் வாகன தணிக்கை யில் ஈடுபட்டு அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டிவனம், வானூர் போன்ற பகுதிகளில் அதிக பாரம், அதிக பயணிகள் ஏற்றியதற்கும், சாலை வரி போன்ற பல்வேறு விதிமுறைகளில் ஈடுபட்ட 403 வாகனங்களுக்கு ரூ.19 லட்சத்து 21 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் 62 வாகனங்களை திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள், பள்ளி கல்லூரி மாண வர்களில் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்ய செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்த னர்.

    • சிதம்பரம் மதுவிலக்கு அமல் பிரிவு முதல்நிலை காவலர் ராஜசேகர்.
    • ராஜசேகரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்தார்.

    கடலூர்:

    சிதம்பரம் மதுவிலக்கு அமல் பிரிவு முதல்நிலை காவலர் ராஜசேகர்.இவர், கடலுார் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில், தலைமைக் காவலர் கண்ணன் என்பவருடன் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது, அந்த வழியாக நடந்து வந்த மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த சீனுவாசன், (வயது42) என்பவரை நிறுத்தி சோதனை செய்தார்.இதனால் ஆத்திரமடைந்த அவர், ராஜசேகரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், புதுநகர் போலீசார், சீனுவாசன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • நாமக்கல், திருச்சி ரோட்டில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • நகராட்சி ஆணையாளர் சுதா துப்புரவு பணியாளர்களை அனுப்பி வைத்து காவல் நிலையம் முன்பு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்தார்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டுவோர் உள்பட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கும் காவல் துறை சார்பில் கூடுதலாக அபராத கட்டணம் விதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாமக்கல், திருச்சி ரோட்டில் நேற்று போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் வந்த நாமக்கல் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் கந்தசாமிக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தனர் .

    இதனால் கந்தசாமி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நகராட்சி பணியாளரான என்மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என கூறினார். ஆனால் போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை. அரசு விதிப்படி அபராதம் கட்டியே ஆக வேண்டும் என்று போலீசார் கூறிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணி மேற்பார்வையாளர் கந்தசாமி நாமக்கல் போலீஸ் நிலையம் முன்பு நகராட்சி பேட்டரி வாகனத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு சென்றார் .

    இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவம் குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே நகராட்சி ஆணையாளர் சுதா துப்புரவு பணியாளர்களை அனுப்பி வைத்து காவல் நிலையம் முன்பு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்தார்.

    இதுகுறித்து நாமக்கல் நகராட்சி ஆணையாளர் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளார். அவரை அழைத்து விளக்கம் கேட்டதுடன் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் சுதா தெரிவித்தார்.

    • அசம்பாவிதம் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
    • ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல்

    அரக்கோணம்:

    தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப் பட உள்ளது. அதையொட்டி பொதுமக்கள் கடைகளுக்கு சென்று புதிய ஆடைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வருகின்றனர்.

    இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தாசன் மற்றும் போலீசார் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் தீவிர வாகன தணிக்கையில் ஈடு பட்டனர்.

    மோட்டார்சைக்கிள்களை ஓட்டி வருபவர்களிடம் உரிய ஆவணங்களை சரி பார்த்து அனுப்பினர். யாரேனும் குடி போதையில் வாகனங்களை ஓட்டி வருகிறார்களா? என்றும் சோதனை செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங் களை பறிமுதல் செய்தனர்.

    • சேலத்தில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் செவ்வாய்ப்பேட்டை சந்தை பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும், சரக்கு ஆட்டோ ஓட்டி வந்த நபர் வாகனத்தை விட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இதை பார்த்த போலீசார், அங்கு சென்று சரக்கு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் 400 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்ட றியப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோவை ஓட்டி வந்தது பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

     அதேபோல் ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாப்பட்டி ஏரி பகுதியில் உள்ள புதருக்குள் ரேசன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.

    அப்போது ஆட்டை யாம்பட்டி பகுதிைய சேர்ந்த சுப்பிரமணி (49) என்பவர் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி ஏரி புதருக்குள் பதுக்கி வைத்து கோழிப்பண்ணைக்கு கடத்தி விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர்.

    ×