search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோழி தலையில் வெடிகுண்டு வைத்து காட்டுபன்றி வேட்டை
    X

    காட்டுப்பன்றி வேட்டையாடியவரை போலீசார் கைது செய்த காட்சி.

    கோழி தலையில் வெடிகுண்டு வைத்து காட்டுபன்றி வேட்டை

    • வாலிபர் ஜெயிலில் அடைப்பு
    • 30-க்கும் மேற்பட்ட கோழி தலைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே கோழி தலையில் வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியவரை போலீசார் ைகது செய்து ெஜயிலில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் கீழ்கொடுங்காலூர் சப்-இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் பைக்கில் வந்தவரை மடக்கி, பிடித்து விசாரித்தனர். அப்போது ரத்தம் சொட்ட, சொட்ட அவர் கொண்டு வந்த பையை பிரித்து பார்த்தனர்.

    அதில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் காட்டுப்பன்றி மற்றும் நாட்டு வெடிகுண்டு பொருத்திய 30-க்கும் மேற்பட்ட கோழி தலைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் போளூர், அல்லி நகர் பகுதியை சோந்த அஜித் (வயது 25) என்பதும், அவர் கோழி தலைகளுக்குள் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து அஜித்தை கைது செய்த போலீசார், வேட்டையாடப்பட்ட காட்டு பன்றியை ஆரணி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வேட்டை யாட பயன்படுத்திய பைக் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்ததோடு, அஜித்தை ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×