உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

போடி அருகே முதியவர் உள்பட 2 பேர் மாயம்

Published On 2022-07-22 04:41 GMT   |   Update On 2022-07-22 04:41 GMT
  • போடி அருகே முதியவர் உள்பட வியாபாரி மாயமானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் ஒண்டிவீரப்பன் (வயது80). சம்பவத்தன்று இவர் சுருளிபட்டிக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி தாலுகா போலீசில் அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை தேடி வருகின்றனர்.

கம்பம் கோம்பை ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (26). பால் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று திடீரென வீட்டில் இருந்த அவர் மாயமானார். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

பல்ேவறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News