உள்ளூர் செய்திகள்

கோவையில் 2 பேர் தற்கொலை

Published On 2022-09-09 09:51 GMT   |   Update On 2022-09-09 09:51 GMT
  • மனைவியுடன் தகராறு ஏற்பட்டு விபரீத முடிவு எடுத்தனர்.
  • 2 போலீஸ்நிலையங்களில் விசாரணை நடக்கிறது

கோவை

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் தீபக்தாஸ் ( வயது 49). இவர் கோவை இடையர் வீதியில் தங்கி அங்குள்ள ஸ்வீட் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று அவரது மனைவி சம்பள பணத்தை அனுப்புமாறு கூறி உள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தீபக்தாஸ் தான் தங்கி இருந்த அறையில் திடீரென தூக்கு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் வெரைட்டிஹால் ரோடு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தீபக் தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்

இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன்(39). ஆட்டோ டிரைவர்.

சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ஜலாலுதீன் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News