உள்ளூர் செய்திகள்
தேனி அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
- தேனி அருகே தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுவந்த 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி பரிந்துரைத்தார்.
- அதன்பேரில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேனி:
தேனி அருகே சின்னமனூர் சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை(37).
சீலையம்பட்டியை சேர்ந்தவர் அப்துல்லா(62). இவர்கள் மீது தொடர்ந்து குற்றவழக்கு பதிவானதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ்டோங்கரே கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.
அதன்பேரில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் 2 பேரையும் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.