உள்ளூர் செய்திகள்

லாரி மோதி 2 பேர் பலி

Published On 2022-07-09 10:04 GMT   |   Update On 2022-07-09 10:04 GMT
  • மோட்டார் சைக்கிளில் குடவாசல் பெருங்குடி தோப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன், தினேஷ், பிரகாஷ் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
  • கண்ணிமைக்கும் நேரத்தில் கன்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டன.

நீடாமங்கலம்:

நாச்சியார்கோவில் அருகே அழகாபுத்தூர் பகுதியில் மினி கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் குடவாசல் பெருங்குடி தோப்பு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 30), தினேஷ் (25), பிரகாஷ் (26) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் கன்டெய்னர் லாரி , மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டன.இதில் தினேஷ்,பிரகாஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மணிகண்டன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News