உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளம் அருகே விபத்தில் 2 பேர் பலி- தசரா பக்தர்கள் மீது மோதிய வாகனம் எது?- சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை

Published On 2022-10-07 07:49 GMT   |   Update On 2022-10-07 07:49 GMT
  • தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்தை பார்ப்பதற்காக நாராயணன், முருகேசன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
  • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாத்தான்குளம்:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மனேரி காட்டுநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 45). அதே ஊரைச் சேர்ந்தவர் முருகேசன் (35).

வாகனம் மோதி 2 பேர் பலி

இவர்கள் 2 பேரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடந்த தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்தை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் புறப்பட்டனர்.

பின்னர் அவர்கள் நள்ளிரவில் ஊருக்கு புறப்பட்டு வந்தனர். சாத்தான்குளம் அருகே முனைஞ்சிப்பட்டி செல்லும் சாலை வளைவில் சென்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட நாராயணன், முருகேசன் ஆகியோர் உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தசரா பக்தர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

Similar News