உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் பகுதியில் 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
- வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
- ஆய்வில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் உத்தரவின்படி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தினசரி சந்தை மற்றும் மீன் மார்க்கெட் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் சுமார் 100 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.