செய்திகள்
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

தமிழக தேர்தல் முடிவுகள்... ஆளுநருக்கு இன்று அறிக்கை அளிக்கிறது தேர்தல் ஆணையம்

Published On 2021-05-03 09:19 GMT   |   Update On 2021-05-03 09:19 GMT
எம்.பி.க்களாக உள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
சென்னை:

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கப்பட்டுவிட்டது. எந்த இடத்திலும் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கோரிக்கை வரவில்லை. தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை அனுப்ப உள்ளோம்.

எம்.பி.க்களாக உள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் இரண்டு பதவிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News