செய்திகள்
ஸ்டாலினுக்கு உதயநிதியைப் பற்றிதான் கவலை- அமித் ஷா காட்டம்
பெண்களை இழிவுபடுத்தும் திமுக கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என அமித் ஷா பிரசாரம் செய்தார்.
விழுப்புரம்:
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இன்று பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:-
தமிழக மக்களைப் பற்றி கவலைப்பட மோடியை விட சிறந்த தலைவர் இல்லை. தமிழ் மொழி மீதும் தமிழக மக்கள் மீதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி.
பெண்களை இழிவுபடுத்தும் திமுக கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். சோனியா காந்திக்கு ராகுலைப் பற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியைப் பற்றியும்தான் கவலை.
இவ்வாறு அவர் பேசினார்.