செய்திகள்
கமல்ஹாசன்

ஊழல்வாதிகளை எதிர்த்து கமல் போராடுகிறார்- நடிகை சுஹாசினி

Published On 2021-03-30 11:50 GMT   |   Update On 2021-03-30 11:50 GMT
கமல் தனது அப்பாவின் கொள்கையிலேயே நடக்கிறார். அன்று எங்கள் தாத்தா, கதர் சட்டை போட்டு நாட்டுக்காக போராடினார். இன்று கமல் காலர் சட்டை போட்டு போராடுகிறார்.
கோவை:

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை ஆதரித்து அவரது அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சிவானந்தா காலனி பகுதியில் நேற்று மாலை வீதி, வீதியாக நடந்து சென்று டார்ச்லைட்டை கையில் ஏந்தியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

எங்கள் தாத்தா, கமலின் அப்பா, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். அவர் நாட்டுக்காக போராடினார். அதேபோல் கமலும் இன்று ஊழல்வாதிகளை எதிர்த்து போராடுகிறார்.

கமல் தனது அப்பாவின் கொள்கையிலேயே நடக்கிறார். அன்று எங்கள் தாத்தா, கதர் சட்டை போட்டு நாட்டுக்காக போராடினார். இன்று கமல் காலர் சட்டை போட்டு போராடுகிறார்.

மற்றவர்கள் தங்களிடம் பதவி இருந்தாலும், மக்களை பார்க்காமல் தேர்தலில் ஜெயித்து சம்பாதிப்பதே குறிக்கோளாக உள்ளனர். கமல் தேர்தலில் ஜெயித்தால் மக்களை மட்டும் தான் பார்ப்பார். உங்களது குறைகளை என்னவோ அதை கட்சியினரிடம் கூறுங்கள். அதை அவர்கள் தீர்த்து வைப்பர். கமல் நிச்சயம் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று காலை கமல்ஹாசனுடன் இணைந்து சுகாசினி வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் 2 பேருடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Tags:    

Similar News