செய்திகள்
கடலூர், தஞ்சை, சென்னையில் பா.ஜனதா தலைவர் நட்டா பிரசாரம்
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜனதா அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா இன்றும், நாளையும் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜனதா அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா இன்றும், நாளையும் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
இன்று மதியம் கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடியில் உள்ள இடைச்செருவாய் கிராமத்தில் திட்டக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
நாளை மதியம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பூதலூர் கிராமத்தில் உள்ள பூதலூர் நெடுஞ்சாலையில் திருவையாறு தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
நாளை மாலை 4 மணிக்கு துறைமுகம் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வத்தை ஆதரித்து மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி பூக்கடை காவல் நிலையம் அருகில் தொடங்கும் பிரசார ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜனதா அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா இன்றும், நாளையும் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
இன்று மதியம் கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடியில் உள்ள இடைச்செருவாய் கிராமத்தில் திட்டக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
நாளை மதியம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பூதலூர் கிராமத்தில் உள்ள பூதலூர் நெடுஞ்சாலையில் திருவையாறு தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
நாளை மாலை 4 மணிக்கு துறைமுகம் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வத்தை ஆதரித்து மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி பூக்கடை காவல் நிலையம் அருகில் தொடங்கும் பிரசார ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்.