செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

பாக்சிங்கை யோசிச்சு பார்த்து ஓட்டு போடுண்ணே- பிரியாணி கடைக்காரர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கலகலப்பு

Published On 2021-03-20 03:20 GMT   |   Update On 2021-03-20 03:20 GMT
அதிமுக ஆட்சியில் மட்டும்தான் உங்களுக்கு நிம்மதி இருக்கும். நல்லது நடக்க வேண்டும் என்றால் அதிமுக-வுக்கு வாக்களியுங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை:

சென்னை பல்லாவரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தொழிலுக்கும் இடையூறு இல்லாமல் இருந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் இந்த நிம்மதி இருக்குமா? பிரியாணி கடையில் சாப்பிட்டுவிட்டு காசு கேட்டால் ‘பாக்சிங்' குத்து விடுகிறார்கள். பியூட்டி பார்லரில் பெண்களை அடிக்கிறார்கள்.

ஆட்சிக்கு வராதபோதே தி.மு.க.வினர் இத்தனை அட்டூழியங்களை செய்கிறார்கள். எனவே பிரியாணி கடைக்காரர்கள் மற்றும் இதர கடைக்காரர்களை பார்த்து கேட்கிறேன், பழைய சம்பவங்களை எல்லாம் யோசித்து பார்த்து ஓட்டு போடுண்ணே... அ.தி.மு.க. ஆட்சியில் மட்டும்தான் உங்களுக்கு நிம்மதி இருக்கும். நல்லது நடக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கலகலப்பாக பேசினார்.
Tags:    

Similar News