செய்திகள்
டிடிவி தினகரன்

சங்கரன்கோவில் தொகுதியில் அண்ணாதுரை போட்டி- டிடிவி தினகரன் அறிவிப்பு

Published On 2021-03-16 04:07 GMT   |   Update On 2021-03-16 04:07 GMT
கிள்ளியூர் தொகுதிக்கு வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த டாக்டர் மனோவா சாம் ஷாலன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அமமுக வேட்பாளராக ஏ.சீமா அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.ம.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 6-ந் தேதி அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் (தனி) தொகுதி வேட்பாளராக இரா.அண்ணாதுரை நிறுத்தப்படுகிறார். கிள்ளியூர் தொகுதிக்கு வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த டாக்டர் மனோவா சாம் ஷாலன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அ.ம.மு.க. வேட்பாளராக ஏ.சீமா அறிவிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News