லைஃப்ஸ்டைல்

அசத்தலான ஆட்டு இரத்தப் பொரியல்

Published On 2018-02-02 06:47 GMT   |   Update On 2018-02-02 06:47 GMT
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஆட்டு இரத்த பொரியல் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரத்த பொரியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஆட்டு ரத்தம் - 1 கப்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - அரை கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 2 மேசைகரண்டி



செய்முறை :

இரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும்.

சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சுத்தம் செய்த இரத்தத்தில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கி வைத்துள்ள ப.மிளகாய், சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கிய உடன் அதில் பிசைந்து வைத்துள்ள இரத்தத்தை ஊற்றி நன்கு கிளறவும். அடுப்பை மிதமாக எரிய விடவும்.

இரத்தத்தில் உள்ள தண்ணீர் வற்றி நன்கு உதிரி உதிரியாக ஆகும் வரை கைவிடாமல் கிளறவும்.

தண்ணீர் எல்லாம் நன்றாக வற்றி உதிரி உதிரியாக வரும் போது தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.

அசத்தலான ஆட்டு இரத்தப் பொரியல் தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News