லைஃப்ஸ்டைல்

ஈஸி இட்லி சாம்பார் செய்வது எப்படி?

Published On 2017-09-14 07:31 GMT   |   Update On 2017-09-14 07:31 GMT
தனிச்சுவையுடன் கூடிய இட்லி சாம்பாரை எளிதில் செய்ய வேண்டும் என்றால் ஒரு சுலபமான வழி உண்டு. அது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருள்கள் :

துவரம்பருப்பு - 25 கிராம்
பாசிப்பருப்பு - 25 கிராம்
கடலைப்பருப்பு - 25 கிராம்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 4
சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது



செய்முறை :

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் பொடி செய்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  

கடாயை அடுப்பில் வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.  

பிறகு உப்பு, தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.

அடுத்து அதில் அரைத்து வைத்த பருப்பு பொடியை சேர்த்து கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.

அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி இறக்கவும்.

சுவையான இட்லி  சாம்பார் தயார்.

மூன்று வகையான பருப்புகளை சம அளவு எடுத்து வறுத்து மிக்ஸ்சியில் திரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது உபயோகபடுத்தலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News