புளிப்பு, காரம், இனிப்பு சுவையுடன் சட்னி செய்யலாம் வாங்க...
- இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- இந்த சட்னி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப),
கறிவேப்பிலை - கால் கப்,
தனியா - 2 டேபிள்ஸ்பூன்,
கருப்பட்டி - சிறிய துண்டு,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை
செய்முறை:
கடாயில் சிறிது 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தனியா சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி ஆற விடவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் புளி, கருப்பட்டி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கினால்... புளிப்பு, காரம், இனிப்புச் சுவையுடன் வித்தியாசமான சட்னி தயார்!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health