லைஃப்ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு - வேர்க்கடலை கூழ்

Published On 2018-04-11 04:03 GMT   |   Update On 2018-04-11 04:03 GMT
கோடைகாலத்தில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை கேழ்வரகு கூழ் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தரும். இன்று இந்த கூழ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1 கப்,
வேர்க்கடலை - 1 கைப்பிடி,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

கேழ்வரகு மாவை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.

பாத்திரத்தில் 1 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதி வந்ததும் கேழ்வரகு கலவை, வேர்க்கடலை, உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறி விடவும்.  

வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சத்தான கேழ்வரகு - வேர்க்கடலை கூழ் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News