லைஃப்ஸ்டைல்
அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்தது இந்த அடை. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் உகந்தது இந்த அடை.
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 200 கிராம்,
முளைகட்டிய பாசிப்பயறு - ஒரு கப்,
முளைகட்டிய உளுந்து - ஒரு கப்,
முளைக்கட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப்,
முளைகட்டிய கொள்ளு - ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - 4,
இஞ்சி - சிறிய துண்டு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பூண்டுப்பல் - 4,
வெங்காயம் - 1,
எண்ணெய் - 100 மி.லி.,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
இஞ்சி, வெங்காயம், பூண்டுப் பல்லை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.
முளைகட்டிய பயறு, கொண்டைக் கடலை, கறிவேப்பிலை, உளுந்து, கொள்ளு, இஞ்சி, காய்ந்த மிளகாய், பூண்டுப்பல், வெங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, அத்துடன் அரிசி மாவை கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சூப்பரான முளைகட்டிய பயறு அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.