லைஃப்ஸ்டைல்

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் கலந்த காய்கறி சூப்

Published On 2017-11-11 05:16 GMT   |   Update On 2017-11-11 05:16 GMT
மழைக்காலங்களில் அடிக்கடி சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று காய்கறிகளை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் கலவை - ஒரு கப்,
வெங்காயம் - 1
தக்காளி - 1,
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி,
புதினா - ஒரு கைப்பிடி,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி,
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு.



செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகள், வெங்காயத்தாள், புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.

ஆறிய பிறகு மூடியை திறந்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைத்து சூடாக பருகலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News