லைஃப்ஸ்டைல்
சத்தான டிபன் வரகு அரிசி பருப்பு அடை
காலை வேளையில் ஆரோக்கியமான அதே சமயம் வித்தியாசமான உணவை சாப்பிட நினைத்தால், வரகு அரிசி பருப்பு அடை செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள் :
வரகு அரிசி - 1 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
அவல் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 6
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வரகு, பருப்புக்கள் மற்றும் அவலை நீரில் தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் வரமிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத் தூளைப் போட்டு, பொடி செய்த பின்னர் அதனுடன் பின்பு ஊற வைத்துள்ள வரகு அரிசியை போட்டு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, உப்பு சேர்த்து கலக்கவும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள வரகு மாவை சேர்த்து கலந்து, 2 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2 மணிநேரம் ஆன பின்னர், அதில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி காய்ந்ததும், மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வரகு அரிசி பருப்பு அடை ரெடி!!!
சூப்பரான வரகு அரிசி பருப்பு அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வரகு அரிசி - 1 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
அவல் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 6
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வரகு, பருப்புக்கள் மற்றும் அவலை நீரில் தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் வரமிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத் தூளைப் போட்டு, பொடி செய்த பின்னர் அதனுடன் பின்பு ஊற வைத்துள்ள வரகு அரிசியை போட்டு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, உப்பு சேர்த்து கலக்கவும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள வரகு மாவை சேர்த்து கலந்து, 2 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2 மணிநேரம் ஆன பின்னர், அதில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி காய்ந்ததும், மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வரகு அரிசி பருப்பு அடை ரெடி!!!
சூப்பரான வரகு அரிசி பருப்பு அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.