லைஃப்ஸ்டைல்
சத்தான மதிய உணவு சாமை சாம்பார் சாதம்
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசியை வைத்து சாம்பார் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி - 4 கப்,
பீன்ஸ் - 250 கிராம்,
கேரட் - 250 கிராம்,
கத்திரிக்காய் - 50 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 8,
துவரம் பருப்பு - ஒரு கப்,
உளுந்தம் பருப்பு - ஒரு கப்,
சின்ன வெங்காயம் - 10,
முருங்கைக்காய் - 2,
புளி - நெல்லிக்காய் அளவு,
உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு,
சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய் - சிறிதளவு.
செய்முறை :
கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், முருங்கைக்காய், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
சாமை அரிசியை தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும்.
துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக் கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும்.
ஊறவைத்த சாமை அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும்.
ஏழரை கப் தண்ணீர் சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும். அரிசி வெந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும்.
கடைசியாக கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.
சூப்பரான சாமை சாம்பார் சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாமை அரிசி - 4 கப்,
பீன்ஸ் - 250 கிராம்,
கேரட் - 250 கிராம்,
கத்திரிக்காய் - 50 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 8,
துவரம் பருப்பு - ஒரு கப்,
உளுந்தம் பருப்பு - ஒரு கப்,
சின்ன வெங்காயம் - 10,
முருங்கைக்காய் - 2,
புளி - நெல்லிக்காய் அளவு,
உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு,
சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய் - சிறிதளவு.
செய்முறை :
கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், முருங்கைக்காய், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
சாமை அரிசியை தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும்.
துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக் கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும்.
ஊறவைத்த சாமை அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும்.
ஏழரை கப் தண்ணீர் சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும். அரிசி வெந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும்.
கடைசியாக கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.
சூப்பரான சாமை சாம்பார் சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.