லைஃப்ஸ்டைல்

சத்தான காலை டிபன் திணை மிளகு பொங்கல்

Published On 2017-09-27 03:42 GMT   |   Update On 2017-09-27 03:42 GMT
அனைத்து தரப்பினரும் அடிக்கடி சிறுதானிங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று திணை அரிசியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

திணை அரிசி - ஒரு கப்,
பாசிப்பருப்பு - கால் கப்,
மிளகு -  2 டீஸ்பூன்,
உப்பு , நெய் -  தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பச்சை மிளகாய் -  2
சீரகம் - 2 டீஸ்பூன்,
இஞ்சித் துருவல் - சிறிதளவு,
முந்திரி - 10.



செய்முறை :

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

திணை அரிசி, பாசிப்பருப்பை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.

வறுத்த அரிசி, பருப்பை குக்கரில் போட்டு அதனுடன் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, 4 கப் தண்ணீர் சேர்த்து குழைய வேக விடவும்.

வாணலியில் நெய் விட்டு முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொங்கலுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

சத்தான காலை உணவு திணை மிளகு பொங்கல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News