லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான கருப்பட்டி கேழ்வரகு கூழ்

Published On 2017-09-04 03:34 GMT   |   Update On 2017-09-04 03:34 GMT
குழந்தைகளுக்கு கருப்பட்டி சேர்த்து கேழ்வரகு கூழ் தயாரித்து கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். இன்று இந்த கூழ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1/2 கப்
கொதிக்க வைத்த பால் - 1.5 கப்
கருப்பட்டி - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
பாதாம் - சிறிது
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்



செய்முறை :

* பாதாமை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

* முதலில் கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கருப்பட்டி கரைந்ததும் இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு, 2 கப் நீரை ஊற்றி கெட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் பால் ஊற்றிக் கிளறி, அடுப்பில் வைத்து, தொடர்ந்து கைவிடாமல் கரண்டி கொண்டு கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

* கேழ்வரகானது சற்று கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் கருப்பட்டி பாகு, ஏலக்காய் பொடி மற்றும் பாதாம் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

* சத்தான கருப்பட்டி கேழ்வரகு கூழ் ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News