லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த வரகு - கேழ்வரகு தோசை

Published On 2017-08-05 03:31 GMT   |   Update On 2017-08-05 03:31 GMT
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று வரகு, கேழ்வரகு வைத்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வரகு அரிசி - 200 கிராம்
கோதுமை - 100 கிராம்
கேழ்வரகு - 100 கிராம்
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
வெந்தயம் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
நெய் (அ) நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வரகு அரிசி, ராகி, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரைந்த எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும்.

இந்த மாவில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

மிகவும் சத்தான வரகு - கேழ்வரகு தோசை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News