லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான சத்துமாவு பாசிப்பருப்பு அடை

Published On 2017-06-27 05:22 GMT   |   Update On 2017-06-27 05:22 GMT
தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று சத்துமாவு, பாசிப்பருப்பை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு - 1 கப்,
பாசிப்பருப்பு - அரை கப்,
சின்ன வெங்காயம் - கால் கப்,
பூண்டு - 4 பல்,
கொத்துமல்லித் தழை - சிறிதளவு,
தேங்காய் - 1 பத்தை,
மிளகு - 1 ஸ்பூன்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு,  எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

* சின்ன வெங்காயம், தேங்காய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கொரகொரப்பாக அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன், சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.

* கரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, தேங்காய், கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

* சத்தான சுவையான சத்துமாவு பாசிப்பருப்பு அடை ரெடி.

* அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News