லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை சூப்

Published On 2017-06-21 05:31 GMT   |   Update On 2017-06-21 05:31 GMT
அதிகளவு சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. பசலைக்கீரையை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பசலைக்கீரை - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 100 மில்லி
பூண்டு - அரை பல்
சின்ன வெங்காயம் - 2
எண்ணெய் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை



செய்முறை :

* சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பசலைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பூண்டு, சின்னவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் கீரையைச் சேர்த்து வதக்கவும்.

* போதுமான உப்பைச் சேர்க்கவும்.

* அடுத்து அதில் தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள் போட்டு கீரையை நன்கு வேக வைக்கவும்.

* கீரை வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

* வடிகட்டிய சூப்பை அடுப்பில் வைத்து சிறிது சூடேற்றி இறக்கி பரிமாறவும்.

* சத்தான பசலைக்கீரை சூப் ரெடி.

* குழந்தைகளுக்கு இந்தக் கீரை சூப்பைக் கொடுக்கவும்.

குறிப்பு:

பொதுவாக சூப் செய்யும்போது கொதிக்க விடக்கூடாது. மிதமான சூட்டில்தான் கீரை, காய்கறிகளை வேகவிட வேண்டும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News