search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசலைக்கீரை சமையல்"

    தோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பசலைக்கீரை டிப். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - ஒரு கட்டு
    ஆலிவ் ஆயில் - 1 மேசைகரண்டி
    சின்ன வெங்காயம் - 5
    தயிர் - 2 கப்
    உப்பு மற்றும் மிளகு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறிது தண்ணீல் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

    வேக வைத்த பசலைக்கீரையை விழுதாக அரைத்து அதனுடன் தயிர், உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வதங்கிய வெங்காயத்தை தயிர் கலவையில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    பரிமாறுவதற்கு முன்பு குளிரவைத்து, அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பசலைக்கீரை டிப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் - பன்னீர் சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்
    தேவையான பொருட்கள் :

    பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு
    வேகவைத்த பச்சைப்பட்டாணி - 1 கப்
    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
    பன்னீர் - 100 கிராம்
    வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    வெங்காயம், தக்காளி பெரியது - தலா 1
    முழு முந்திரிப்பருப்பு - 6
    கரம் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    சீரகம், எண்ணெய், வெண்ணெய் - தாளிக்க



    செய்முறை :

    முந்திரியை ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

    பாலக்கீரையை சூடு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்த பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    பன்னீரையும் கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுத்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், வெண்ணெய் போட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் பொடித்த சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த் தூள், வேக வைத்த பட்டாணியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த முந்திரி விழுது, பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பன்னீரை சேர்த்து கொதி வந்ததும் இறக்கி விடவும்.

    சூப்பரான பாலக் - பன்னீர் சப்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசி, பாலக்கீரை சேர்த்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 1 கப்
    பாசிப்பருப்பு - 1/3 கப்
    பாலக் கீரை - 1 கட்டு
    பெரிய வெங்காயம் - 1
    பச்சைமிளகாய் - 1
    இஞ்சி - 1 துண்டு
    உப்பு - 1/3 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    உளுந்து - அரை  டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    முந்திரி - 10



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சாமை அரிசியை வறுத்து பாசிப்பருப்பைச் சேர்த்து 3 ½ கப் நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

    குக்கரில் அரிசி பாசிப்பருப்பைத் தண்ணீருடன் ஊற்றி கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு போட்டு 7 விசில் வரும்வரை வேகவிடவும்.

    வெந்ததும் இறக்கி மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் உளுந்து, சீரகம், மிளகு முந்திரி போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கம்பு, பாலக்கீரை உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்தும். வயிற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றும். டயட் செய்பவர்களுக்கு இது ரொம்ப ருசியான சத்தான உணவு.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 1 கப்
    ப. மிளகாய் - ஒன்று
    வெங்காயம் - ஒன்று
    கரகரப்பாக திரித்த மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    பாலக் கீரை (பசலை கீரை) - பொடியாக அரிந்தது அரை கப்
    நெய் - ஒரு தேக்கரண்டி
    தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பு மாவை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.

    கம்பு மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், பாலக்கீரை, தேங்காய் துருவல், உப்பு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை சம உருண்டைகளாக பிரிக்கவும்.

    ஒரு தட்டில் சதுர வடிவ ஈரதுணியை விரித்து அதில் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக தட்டவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது பட்டர் அல்லது நெய் தடவி தட்டிய ரொட்டியை இட்டு இரண்டு புறமும் நன்கு சிவக்க வேகவைத்து லேசாக நெய் தடவி இறக்கவும்.

    நெய் வேண்டாமெனில் ஆலிவ் ஆயில் தடவி சுட்டு எடுக்கவும்.

    சுவையான கம்பு பாலக் ரொட்டி ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து சத்தான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக்கீரை - 1 கட்டு
    கோதுமை மாவு - 1 கப்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
    ப.மிளகாய் - 1
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெண், உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பசலைக்கீரையை கொட்டி வதக்கவும்.

    அதனுடன் ப.மிளகாயையும் சேர்த்து வதக்கி ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த கீரை விழுது, கரம் மசாலா துள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    மாவு மிருதுமான பதத்திற்கு வந்ததும பூரிகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான பசலைக்கீரை பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டிரை நட்ஸ், கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காய்ந்த கருப்பு திராட்சை - ஒரு கைப்பிடி,
    பசலைக்கீரை - ஒரு சிறிய கட்டு
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
    வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி - தேவையான அளவு,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி பசலைக்கீரை, மிளகுத்துள், உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் காய்ந்த கருப்பு திராட்சை, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த பசலைக்கீரை நட்ஸ் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வார நாட்களில் இரவு நேரங்களில் என்ன செய்வதென்று குழம்பி கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு நல்ல இரவு உணவாக கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    மக்ரோனி - 1 கப்
    ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்
    பூண்டு பற்கள் - 5
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    காளான் - 10
    பசலைக்கீரை - 1 கட்டு
    டையட் மயோனிஸ் - 5 ஸ்பூன்
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை

    பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காளானை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அந்த நீரில் உப்பு சேர்த்து மக்ரோனியை போட்டு வேக வைக்கவும். 5 நிமிடங்கள் வேக விடவும். அவ்வப்போது அடியில் மக்ரோனி தாங்காமல் இருக்க கிளறி விடவும். 5 நிமிடத்திற்கு பிறகு, மக்ரோனியை வடிகட்டி எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.  

    வடிகட்டி எடுத்து வைத்த நீரில் 120 மிலி தண்ணீரை தனியே எடுத்து வைத்து கொள்ளவும். இதனை பிறகு பயன்படுத்த வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றி  சூடானதும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வெந்தவுடன், காளான் மற்றும் கீரையை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

    கீரையில் இருக்கும் நீர் வெளியேறும். அதன் பின்பு, சிறிதளவு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    மக்ரோனி வேக வைத்து வடிகட்டி எடுத்து வைக்கப்பட்ட நீரை இப்போது இந்த கலவையில் சேர்த்து நன்றாக கிளறவும்.

    இப்போது அடுப்பில் இருந்து கடாயை இறக்கி, மயோனிஸ் சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு மறுபடி, அடுப்பில் வைத்து கிளறவும். 1 நிமிடத்தில் சாஸ் சற்று கெட்டியாக மாறும். இந்த நேரத்தில் மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

    இப்போது கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சூடான டீ, காபியுடன் மொறு மொறு பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - 1 கட்டு
    கடலை மாவு- 1 கப்
    பெ.வெங்காயம்- 2 (நறுக்கவும்)
    மிளகாய் தூள் - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை:


    கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை கொட்டி தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்கு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    அதனுடன் கடைசியாக கீரையை கலந்துகொள்ளவும்.

    வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கலந்து வைத்துள்ள மாவு கலவையை உதிர்த்து போட்டு பக்கோடா தயாரிக்கவும்.

    சூப்பரான கீரை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பார்லி, பாலக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :


    பார்லி - அரை கப்,
    பாலக்கீரை (நறுக்கியது) - ஒரு கப்,
    பூண்டு, சின்ன வெங்காயம் - தலா 4,
    கிராம்பு - 2,
    பட்டை - சிறு துண்டு,
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை:

    பாலக்கீரையை பொடியாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லியை வேகவைத்து வடித்து ஒரு கப் நீர் எடுத்துக்கொள்ளவும்.

    வேக வைத்த பார்லியில் ஒரு ஸ்பூன் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    நறுக்கிய கீரையை கொதிக்கும் நீரில் போட்டு, அடுப்பை அணைக்கவும். ஆறியதும் நீரை வடித்து, கீரையை அரைத்து கொள்ளவும்.

    பூண்டு, சின்ன வெங்காயம், கிராம்பு, பட்டை ஆகியவற்றை ஒன்றிரண்டாக சிதைக்கவும் (அல்லது மிகப் பொடியாக நறுக்கலாம்).

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை போட்டு சூடானதும் சின்ன வெங்காய கலவையை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அரைத்த கீரை விழுது, கொத்தமல்லித்தழை, பார்லி தண்ணீர் (தேவையானால் மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்), உப்பு, மிளகுத்தூள், அரைத்த பார்லி சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பார்லி - பாலக் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோர்வடையாமல் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க சாலட்டை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இன்று பசலைக்கீரை, முட்டை சேர்த்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பசலைக்கீரை - கால் கட்டு
    முட்டை - 2
    தக்காளி - 2
    மிளகுத் தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    பசலைக்கீரையை நன்கு கழுவி, பொடியாக நறுக்கி வைக்கவும்.

    முட்டையை நன்றாக வேக வைத்து ஓட்டை உரித்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    அடுத்து தக்காளியை வட்டத் துண்டுகளாக்கி, அதனை லேசாக நெருப்பில் க்ரில் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு பௌலில் முதலில் நறுக்கிய கீரையை போட்டு அதன் மேல் தக்காளியை வைத்து ஒருமுறை பிரட்டி, பின் அதன் மேல் முட்டையை வைத்து, வேண்டுமானால் மேலே லேசாக உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    சூப்பரான பசலைக்கீரை - முட்டை சாலட் ரெடி.

    பசலைக்கீரையை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் கீரையை 3 நிமிடம் சூடான நீரில் போட்டு வைத்த பின்னர் எடுத்தும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×