லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த ஆவாரம் பூ டீ

Published On 2017-06-02 05:34 GMT   |   Update On 2017-06-02 05:34 GMT
ஆவாரம்பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் இன்சுலின் பூஸ்டர்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஆவாரம் பூ, இலை, பட்டை, வேர், விதை ஐந்தும் சேர்த்துச் செய்த பொடி - 2 டீஸ்பூன்
அல்லது காய்ந்த ஆவாரம் பூ - 10 - 15,
ஏலக்காய் - 2,
பட்டை - சிறிய துண்டு,
தேன் -  ஒரு டீஸ்பூன்,
பால் - கால் கப்.



செய்முறை :

* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் நீர் ஊற்றி கொதி வந்ததும் அதில் ஆவாரம் பூ பொடி, பட்டை, பொடித்த ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

* நீர் பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன், பால் சேர்த்துப் பருகவும்.

* சூப்பரான ஆவாரம் பூ டீ ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News