லைஃப்ஸ்டைல்

அஜீரண பிரச்சனையை குணமாக்கும் புதினா சூப்

Published On 2017-05-26 05:30 GMT   |   Update On 2017-05-26 05:30 GMT
புதினா கீரையைச் சாப்பிட்டு வந்தால், அஜீரண கோளாறுகள் நீங்கும். இன்று புதினாவை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

புதினா இலை - 1 கப்,
வேகவைத்து மசித்த துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 1,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1/4 கப்,
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
சீஸ் துருவல் - 1 டீஸ்பூன்.



செய்முறை :

* மிக்சியில் புதினா இலை, பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு விழுது போட்டு வதக்கிய பின்னர் அரைத்த விழுது, மசித்த பருப்பு போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.

* எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை, சீஸ் துருவலைத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

* சூப்பரான சத்தான புதினா சூப் ரெடி.

* குறிப்பு: புதினா இலையை நன்கு வதக்கியும் செய்யலாம். வதக்கி அரைத்தும் சூப்பில் சேர்க்கலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News