லைஃப்ஸ்டைல்

சளி, தொண்டை வலிக்கு இதமான மிளகு - சீரக சாதம்

Published On 2017-05-24 03:30 GMT   |   Update On 2017-05-24 03:31 GMT
சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மிளகு, சீரக சாதம் இதமாக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 2 கப்
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
நெய் - 3 முதல் 4 டீஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு



செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு அத்துடன் 5 கப் தண்ணீரை விட்டு 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விட்டு வைத்துக் கொள்ளவும்.

* வெறும் வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்து, கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் நெய்யை விட்டு முந்திரிப்பருப்பைப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்துள்ள சாதம், மிளகு, சீரகப் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு, நன்றாகக் கலந்து, இறக்கி கத்திரிக்காய் கொஸ்துடன் பரிமாறவும்.

* சத்தான மிளகு, சீரக சாதம் ரெடி.

கவனிக்க:  அதிக காரம் விரும்பாதவர்கள், மிளகு, சீரகப் பொடியை சற்று குறைத்துக் கொள்ளவும். அல்லது நெய்யைக் கூட்டிக் கொள்ளவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News