லைஃப்ஸ்டைல்

சளியை குணமாக்கும் கற்பூரவல்லி டீ

Published On 2017-05-17 03:34 GMT   |   Update On 2017-05-17 03:34 GMT
கற்பூரவல்லி டீ செரிமான மண்டலத்தை சீராக்கி, சிறுநீரகப் பாதைத் தொற்றைக் குணப்படுத்தும். சளி, தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த டீயை அருந்தினால் பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள் :

தேயிலை - ஒரு டீஸ்பூன்,
கற்பூரவல்லி இலைப்பொடி - கால் டீஸ்பூன்,
தேன் - 1 டீஸ்பூன்.



செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

* தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது தேயிலையுடன் கற்பூரவல்லி இலைப்பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

* பிறகு, அதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்துப் பருகவும்.

* கற்பூரவல்லி டீ ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News