லைஃப்ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு - கேழ்வரகு கஞ்சி

Published On 2017-05-16 03:46 GMT   |   Update On 2017-05-16 03:46 GMT
கோடை காலத்தில் கம்பு, கேழ்வரகு உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இன்று கம்பு கேழ்வரகை வைத்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - ஒரு கப்,
கம்பு மாவு - அரை கப்,
அரிசி நொய் - அரை கப்,
சின்ன வெங்காயம் - ஒரு கப்,
கடைந்த தயிர் - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை :

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேழ்வரகு மாவில் 3 கப் தண்ணீர் விட்டு முதல் நாளே கரைத்து புளிக்கவிடவும்.

* மறுநாள் கம்பு மாவை ஒரு கப் நீர் விட்டு உடனடியாக கரைத்துக்கொள்ளவும்.

* அரை கப் அரிசி நொய்யில் ஒரு கப் நீர் விட்டு வேகவிடவும்.

* அரிசி வெந்ததும் அதில் புளிக்க வைத்த கேழ்வரகு மாவு, கரைத்த கம்பு மாவு, உப்பு சேர்த்து கட்டித் தட்டாதவாறு கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
* அனைத்தும் வெந்ததும் இறக்கி, கடைந்த தயிர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறவும்.

* சத்தான கம்பு - கேழ்வரகு கஞ்சி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News