லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த சிவப்பு அரிசி - கேழ்வரகு இடியாப்பம்

Published On 2017-05-10 03:37 GMT   |   Update On 2017-05-10 03:37 GMT
சிவப்பு அரிசி, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசி, கேழ்வரகை வைத்து சத்து நிறைந்த இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி மாவு - கால் கிலோ
கேழ்வரகு மாவு - கால் கிலோ
உப்பு - சிறிதளவு



செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* ஒரு பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவு, கேழ்வரகு மாவு இரண்டையும் சேர்த்து கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, இலகுவான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
 
* இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்பமாகப் பிழியவும்.

* குக்கரிலோ இட்லி பாத்திரத்திலோ பிழிந்த இடியாப்பத்தை வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வேகவிடவும்.

* சூடான இடியாப்பத்துடன் தேங்காய் பால், பால் சேர்த்துச் சாப்பிடலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News