லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த சிறுதானிய - தேங்காய்ப்பால் சூப்

Published On 2017-02-20 03:36 GMT   |   Update On 2017-02-20 03:36 GMT
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்களை வைத்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரை வாலி, வரகு, சாமை, தினை - 100 கிராம்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
பூண்டு - 4 பல்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
சின்ன வெங்காயம் - 10,
சீரகம் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை :

* சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அனைத்து சிறுதானியங்களையும் கழுவி சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைத்து அரைக்கவும்.

* தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில் வைத்து கஞ்சிப் பதத்திற்கு வரும்வரை வேக விடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பச்சைமிளகாய், பூண்டு போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்த சிறுதானிய கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.

* நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.

* கடைசியாக அதில் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.

* சத்து நிறைந்த சிறுதானிய - தேங்காய்ப்பால் சூப் ரெடி.

* இதில் காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News