வழிபாடு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரும் 25-ந் தேதி வரலட்சுமி விரதம்

Published On 2023-08-17 04:52 GMT   |   Update On 2023-08-17 04:52 GMT
  • வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க நாளை காலை 9 மணிக்கு 150 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
  • நேரடி தரிசனத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் ரூ.1000 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம்.

திருப்பதி:

திருப்பதி, திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதம் வரும் 25-ந்தேதி பிரமாண்டமாக நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 25-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை தன மண்டபத்தில் வரலட்சுமி விரதம் நடைபெறும். மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் மாட வீதிகளில் உலா வருகிறார்.

வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க நாளை காலை 9 மணிக்கு 150 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

இதேபோல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பக்தர்களுக்கு பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள குங்கும அர்ச்சனை கவுண்டரில் வரும் 24-ந்தேதி நேரடியாக 150 தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

நேரடி தரிசனத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் ரூ.1000 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். ஒரு தரிசன டிக்கெட்டுக்கு 2 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் வரும் 26-ந் தேதி முதல் 90 நாட்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

வரலட்சுமி விரதம் நடைபெறும். நாளில் அபிஷேகம், கல்யாண உற்சவம், வஸ்திர அலங்கார சேவை, அபிஷேக தரிசனம், லட்சுமி பூஜை, ஊஞ்சல் சேவை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் வேத ஆசீர்வசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News