வழிபாடு

சதுரகிரியில் ஒரு வாரம் தரிசனம் செய்ய அனுமதி வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

Published On 2022-07-11 07:48 GMT   |   Update On 2022-07-11 07:48 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
  • 2 ஆண்டுகளுக்கு பிறகு சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்த திருவிழா நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பிரதோஷம், ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:- சதுரகிரி கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்கள் போதுமானதாக இல்லை. எனவே 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 3 நாட்கள் அனுமதி அளித்து ஒரு வாரத்திற்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News